Thursday, January 24, 2008

காதல்

என்னை பார்த்து சிரித்தாள்.,
எனக்கு கரம் கொடுத்து சீராக்கினாள்.,
'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

எனக்கு துன்பம் என்றால், அவள் துடித்தாள்.,
என் கஷ்டம் அவள் சகிக்க மாட்டாள்.,
'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

என்னுடனேயே இருந்தாள்
என் உயிர் போல் ஆனாள்.,
'காதலா?' என்றேன்.,'இல்லை., அன்பு' என்றாள்.

அவள் மணநாள் மேடையில்,
என்னைப் பார்த்து கண்ணீர் சிந்தினாள்.
'அன்பா?' என்றேன்.,'இல்லை.,

காதல்' என்றாள்...

1 comment:

Thoughts said...

muthal muraiye ....
anba? endru ketu irukalaaam

iruthiyil

kaadhal endru irupaal

satru vaerupaadu kondu
yosingal...