Saturday, January 10, 2009

காதல் தடம்
----------------
மனதின் தீராத பக்கங்களில்
உன் பெயரை கிறுக்குகின்றது
காதல்
__

ஆசையின் அனைத்து பரிணாமங்களிலும்
தெரிகிறது உன் பிம்பம்
தேவதையாக

__

எனக்கான அழகிய உலகத்தில்
உனக்கு மட்டுமே இடம்
இருக்கிறது



நீ என்னை பிரிந்தாலும்
கிறுக்கிய பெயரும்
தேவதை பிம்பமும்
உனக்கான இடமும்
என்றும் மாறாமல்
உன் நினைவுகளின் தடமாக
வாழ்ந்து கொண்டிருக்கும்.............

Thursday, January 8, 2009

நீ…நான்…நிழல்…
மெளனமாய் நாம்

கண்கலந்திருந்தபோது

நம்

நிழல்கள் பேசிக் கொண்ட

சங்கதி என்னவாக இருக்கும்?

____________________

நீ காதலிக்க

தொடங்கிய பின்

என் நிழலிலும்

வர்ணங்கள்!

_________________________

ஒட்டி அமர்ந்தோம்

கட்டிக் கொண்டன

நிழல்கள்!

___________________

அடுத்த சந்திப்பிற்காக

காத்திருக்கிறோம்;

உனக்காக நானும்

நின் நிழலுக்காக

என் நிழலும்!

________________________

இவ்விடயத்தில்

உன்னைக்காட்டிலும்

உன் நிழல் மேல் ;

முத்தம் கேட்டால்

முகம் சுழிப்பதில்லை

என் நிழலிடம்!

இதற்குப் பெயர்தான் காதலா...?


உன் ஈர தென்றல் பார்வை

என் நினைவு மேகங்களை கலைத்ததால் பொழியும்

இந்த கவிதை மழைக்குப் பெயர்தான்

--காதலா???