Thursday, January 8, 2009

நீ…நான்…நிழல்…
மெளனமாய் நாம்

கண்கலந்திருந்தபோது

நம்

நிழல்கள் பேசிக் கொண்ட

சங்கதி என்னவாக இருக்கும்?

____________________

நீ காதலிக்க

தொடங்கிய பின்

என் நிழலிலும்

வர்ணங்கள்!

_________________________

ஒட்டி அமர்ந்தோம்

கட்டிக் கொண்டன

நிழல்கள்!

___________________

அடுத்த சந்திப்பிற்காக

காத்திருக்கிறோம்;

உனக்காக நானும்

நின் நிழலுக்காக

என் நிழலும்!

________________________

இவ்விடயத்தில்

உன்னைக்காட்டிலும்

உன் நிழல் மேல் ;

முத்தம் கேட்டால்

முகம் சுழிப்பதில்லை

என் நிழலிடம்!

No comments: