Sunday, October 7, 2007

இந்த கவிதை என் நண்பிக்கு

நண்பி.........
நட்பு....
சாதாரணமாகத்தான் இருந்தது எனக்கு
உன்னை காணும் வரை
ஏதேனும் எதிர்பார்ப்புக்களுடனே
அன்பு காட்டும் உலகில்
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்-உன்
அன்பை எண்ணி வியந்து போகிறேன்....

நண்பி.........
மொழிகளோ....
தூரங்களோ........
வயதோ.......
மற்ற எதுவுமே - நட்பை
எதிர் பார்ப்பதில்லை...
உன்னாலே புரிந்து கொண்டேன்..
என் வாழ்க்கைத் தோட்டத்தில்
எத்தனையோ 'நட்பு" மலர்கள் - ஆனால்
உன் நட்பைப்போல் எதுவும்
மலர்ந்து மணம் வீசவில்லை
கால வெள்ளத்தில்
சிதறுண்டு போகும் உறவுகளில்
நண்பி.............
தொடர்வாயா
உன் நட்பை இறுதி வரை..........?

ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு

துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி
,நீ பிரிந்த துக்கமோ
தினம் எனை தூக்கிலிடுகிறது,
ம‌ர‌ண‌மோ எனை ம‌றும‌ண‌ம்
செய்ய‌ தூண்டுகிற‌து.

க‌ண்ம‌ணியே,
உனை ச‌ந்திக்க‌
ஒரு வாய்ப்பு கொடு.
பிஞ்சு விர‌லால் எனை மெல்ல‌ தொடு,
உனை நேசிக்க‌ ஆணையிடு,
உன் அழகை ஆள‌விடு.

உன் இத‌ழ் மீது இருக்க‌விடு,
உன்னில் தொலைத்த‌ என்னை தேட‌விடு.
உன் ம‌டிமீது எனை மாய்த்துவிடு
அதுவ‌ரை, ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு

பீனிக்ஸ் அல்ல

இதயம் அது பீனிக்ஸ் அல்ல
இழந்தப்பின்னே இளமை பெற
நானும் இங்கே தேவனின் குமாரானாயில்லை,
மூன்றாம் நாளிலாவது உயிர்த்தெழ!

விட்டுப்போன பின்
கேள்வியென்ன புதிதாய்
நல்லாயிருக்கியாடா....

காத‌ல்-palindrom

காதல் மலர்வது கண்களில்
உண்மைதான்
அவ‌ள் க‌ண்க‌ளில் என்
முக‌ம்
என் க‌ண்க‌ளில் அவ‌ள்
உண்மைதான்
க‌ண்க‌ளில் ம‌ல‌ர்வ‌து காத‌ல்

ஜாதி என்ன ஜாதி?

பாய்ந்த வெள்ளையாறு,
ஓய்ந்த இடத்தில் உருவாக்கிடும்!!
இரண்டில் ஒரு ஜாதி -ஆனால்
இரண்டுமே மனித ஜாதி!

இயற்கைக்கே இல்லாத பிரித்திடவும் இயலாத
,அதிகாரம் எவன் கொடுத்ததிங்கு??

மனிதனுக்கு மனிதனே
ஜாதிவர்ணம் பூசிட....

பூக்களை பிய்த்தெரிந்திட
எவன் ஏந்தின கோடாரி
இந்த ஜாதிவெறி?!

ஜாதிக்கலவரங்களில்...
வெட்டிக்கொள்ளும்போதெல்லாம்
கண்கள் காணவில்லையா?

திட்டுதிட்டாய் வழியும் இரத்தம்
சிவப்பு நிறம் தானென்று!
வெட்டுபட்டு விழுந்த உறுப்புமனித கரம் தானென்று!

ஜாதிக்கலவரங்களில்...
தீயை மூட்டின போதெல்லாம்
காதுகள் கேட்கவில்லையா??
அழுகின்ற குரல்கள்மனித ஜாதியென்று! -தீயில்
அழுகிப்போன பாகங்கள்
மனித உடலின் மீதியென்று!

தண்ணீரும், தேநீரும்!!
கண்ணாடி குவளையில்!!
மேல் சாதிக்காரனுக்கு...

அலுமினிய குவளையில்!!
கீழ் சாதிக்காரனுக்கு....

பாவம்..
கண்ணாடிகளும்,அலுமினியங்களும் கூட,
தப்பிக்கவில்லை உங்களின்
அற்பத்தனமான ஜாதிவெறிக்கு...

தேவதை

காலை இளசூரியன்
கதிர்கரம் நீட்டும்போது
கண்ணிரணடும் இமைக்கவில்லை..
காரணமும் புரியவில்லை..
உன் பாதி விழி பார்வையில்
என் பாதை மாறியது..
மீதி விழி பார்வையில்
மின்னல் என்னை தாக்கியது..!!

தேவதைகள்தான் வரம் தருமாம்..
அப்ப‌டியென்றால் தேவ‌தையாக‌தான்
இருக்க‌ வேண்டும்..
உன்னை பெற்ற‌வ‌ள்...!
நீ எப்போதும்
தலையைக் குனிந்தே
வெட்கப்படுவதால்
உன் மதிப்புமிக்க
வெட்கத்தையெல்லாம்
இந்தப் பூமி மட்டுமே தரிசிக்க முடிகிறது!

ஒரேயரு முறைகொஞ்சம் உன் தலையை நிமிர்த்தி
வெட்கப்படேன்...
வெகுநாட்களாய்
உன் வெட்கத்தைத் தரிசிக்க
துடிக்கிறது வானம்!

உயிர் இன்னும் உருகும்.......

வான் விழியாள்நீல வானில் உலாவும்...
வெள்ளை நிறத்தில்
அந்த வெண்ணிலவு!

வெள்ளை வானில் உலாவும்....
கருமை நிறத்தில்
அவள் கண்ணிலவு!

யார் திட்டியது கடுமையாக?!
அந்த வெண்ணிலவு
அழுகிறதே கண்ணீராய்!

எந்த தேசம் வறுமையாக?!
அவள் கண்ணிலவு பொழிகிறதே மழை நீராய்...

அவளின்.....
விழிகள் உறங்கும் ஒவ்வொரு இரவும் அமாவாசைதான்!
-அன்று, பவுர்ணமியே என்றாலும்!

அவளின்.....விழிப்படலத்தில்,
செந்நிறத்தில் படர்ந்திருக்கும் மரமில்லாமல் சில கிளைகள்....

மின்னல் கீற்றுகளாய்! அவளின்.....
விழிகளின் மேலே வளைந்திருக்கும்
ஒற்றை நிறத்தில் வில்களிரண்டு! அதிசய வானவில்லாய்!

அவளின்.....
விழிகளைச் சுற்றிலும் இமை புற்கள்,
பெய்கின்ற மழையாக....

அவளின்....
ஒரு விழி மிகப்பெரிய அந்த வானமாய்!
இரண்டு மிகச்சிறிய வானங்கள் அவள் விழிகளாய்!
நீ! மீன்விழியாள்
மட்டுமல்லவான் விழியாளும் தான்!

உயிர் இன்னும் உருகும்.......