Sunday, October 7, 2007

ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு

துரத்தும் உன் விழிகளால்
என் தூக்கம் தொலைந்ததடி
,நீ பிரிந்த துக்கமோ
தினம் எனை தூக்கிலிடுகிறது,
ம‌ர‌ண‌மோ எனை ம‌றும‌ண‌ம்
செய்ய‌ தூண்டுகிற‌து.

க‌ண்ம‌ணியே,
உனை ச‌ந்திக்க‌
ஒரு வாய்ப்பு கொடு.
பிஞ்சு விர‌லால் எனை மெல்ல‌ தொடு,
உனை நேசிக்க‌ ஆணையிடு,
உன் அழகை ஆள‌விடு.

உன் இத‌ழ் மீது இருக்க‌விடு,
உன்னில் தொலைத்த‌ என்னை தேட‌விடு.
உன் ம‌டிமீது எனை மாய்த்துவிடு
அதுவ‌ரை, ம‌ர‌ண‌மே என்னை ம‌ன்னித்துவிடு

No comments: