காதல் தடம்
----------------
மனதின் தீராத பக்கங்களில்
உன் பெயரை கிறுக்குகின்றது
காதல்
__
ஆசையின் அனைத்து பரிணாமங்களிலும்
தெரிகிறது உன் பிம்பம்
தேவதையாக
__
எனக்கான அழகிய உலகத்தில்
உனக்கு மட்டுமே இடம்
இருக்கிறது
நீ என்னை பிரிந்தாலும்
கிறுக்கிய பெயரும்
தேவதை பிம்பமும்
உனக்கான இடமும்
என்றும் மாறாமல்
உன் நினைவுகளின் தடமாக
வாழ்ந்து கொண்டிருக்கும்.............
Saturday, January 10, 2009
Thursday, January 8, 2009
நீ…நான்…நிழல்…
மெளனமாய் நாம்
கண்கலந்திருந்தபோது
நம்
நிழல்கள் பேசிக் கொண்ட
சங்கதி என்னவாக இருக்கும்?
____________________
நீ காதலிக்க
தொடங்கிய பின்
என் நிழலிலும்
வர்ணங்கள்!
_________________________
ஒட்டி அமர்ந்தோம்
கட்டிக் கொண்டன
நிழல்கள்!
___________________
அடுத்த சந்திப்பிற்காக
காத்திருக்கிறோம்;
உனக்காக நானும்
நின் நிழலுக்காக
என் நிழலும்!
________________________
இவ்விடயத்தில்
உன்னைக்காட்டிலும்
உன் நிழல் மேல் ;
முத்தம் கேட்டால்
முகம் சுழிப்பதில்லை
என் நிழலிடம்!
Subscribe to:
Posts (Atom)